கொரோனா: இலங்கையில் மீண்டவர்கள் எத்தனை பேர்?

01  5
01 5

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து இதுவரை இலங்கையில் 25 பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றுக்கு உள்ளான நோயாளிகளை பாதுகாக்கும் போராட்டத்தில் இலங்கை சுகாதாரத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில்
நேற்றய தினம் ஒருவர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது.

இந்நிலையில் கொரோனா தொற்றால் இலங்கையில் 159 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இவர்களில் 25 பேர் குணமடைந்துள்ளதோடு 5 நோயளிகள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.