மாவிலாற்றில் குளிக்கச் சென்ற யாழ்.பல்கலைக்கழக மாணவனை காணவில்லை!

fisherman death 001
fisherman death 001

திருகோணமலை மாவட்டம் மாவிலாற்றில் நேற்று மாலை நான்கு மணியளவில் நீராடிக்கொண்டிருந்தவர் நீரின் வேகத்துக்கு ஈடுகொடுக்கமுடியாமல் நீரோட்டத்தில் இழுத்துச்செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார்.

திருகோணமலை திருஞானசம்பந்தர் வீதி மாரியம்மன் கோயில் பிரதேசத்தைச் சேர்ந்த மனோகரன் சஜீவன் வயது 22 என்பவரே இவ்வாரு காணாமல் போனவராவார்.

நண்பர்களுடன் சுற்றுலா சென்றிருந்த வேலையிலே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இவ்வாறு காணாமல் போனவர் யாழ் பல்கலைக்கழக மாணவர் என்பது குறிப்பிடத்கது.