ஊரடங்குச்சட்டத்தை நீடிக்கும் அளவுக்கு கொரோனா தீவிரமாகவுள்ளது !

8 es
8 es

இலங்கையில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டத்தைத் தொடர்ந்து அமுலில் வைத்திருக்க அரசு தீர்மானித்துள்ளது எனத் கூறப்படுகின்றது.

கொரோனா தொற்று காரணமாக அடுத்த இரண்டு வாரங்கள் நிலைமை தீவிரமடையலாம் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதையடுத்து அரசு இந்த தீர்மானத்துக்கு ஒப்புக் கொண்டுள்ளது.

மேலும் குறிப்பிட்டளவு கால அவகாசம் இடையிடையே மக்களுக்கு வழங்கி ஊரடங்குச் சட்டத்தை தொடர்ந்து அமுலில் வைக்க அரசு நடவடிக்கை எடுக்கவுள்ளது எனவும் அறியமுடிகின்றது.

குறித்த நோய் பரவலைத் தடுக்கும் வகையில் தம்புள்ள பொருளாதார நிலையம் உட்படப் பல நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

தற்போதய சூழ்நிலையைப் பயன்படுத்தி அதிக விலைக்குப் பொருட்களை விற்போர் தொடர்பில் 1977 என்ற தொலைபேசி இலக்கத்தில் முறையிடலாம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.