கொரோனா தொற்று பரிசோதனையில் யாழில் இன்று (9) எவருக்கு கொரோனா தொற்று இல்லை என யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.
யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 3 பேருக்கும் கிளிநொச்சி பகுதியில் இருவருக்கும் முல்லைத்தீவு பகுதியில் ஒருவருக்கும் இன்று பரிசோதனை செய்யப்பட்டது.
பரிசோதிக்கப்பட்ட 6 பேருக்கும் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
கொரோனா தொற்றுக்கான பரிசோதனை யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெறுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.