நானுஒயா பொலிஸ்பிரிவிற்குட்பட்ட நுவரெலியா – ஹட்டன் பகுதியில் இருந்து இரண்டு மாடுகளை சட்டவிரோதமாக இறைச்சிக்காக பாரவூர்தியொன்றில் ஏற்றிவந்த நான்கு சந்தேக நபர்களை கைது.
குறித்த சம்பவம் இன்று (09) காலையில் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது.
ஹட்டன் பிரதான குறுக்கு வீதியின் சந்தியில் வைத்து இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் பாரவூர்தியில் 800 கிலோகிராம் இறைச்சி இருந்ததாகவும் தெரிவிக்கபட்டுள்ளது.
நுவரெலியாவிலிருந்து – தலவாக்கலை பகுதிக்கு இறைச்சியை கொண்டு செல்வதாக இரானுவத்தினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யபட்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர்கள் நான்கு பேரையும் நானுஒயா பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதோடு அவர்களை நுவரெலியா நீதவான் முன்னிலையில் முன்னிலைபடுத்த நடவடிக்கை மேற்கொள்ளபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.