குருணாகல் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
குறித்த பிரிவில் அனுமதிக்கப்பட்ட நோயாளியொருவர் கொரோனா வைரஸ் தொற்று போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்தியமையினாலேயே அவசர சிகிச்சை பிரிவு இவ்வாறு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சரத் வீரபண்டார கூறியுள்ளார்.
மேலும் குறித்த வைத்தியசாலையில் பணிபுரியும் 39 ஊழியர்கள் கொரோனா தொற்று என்ற சந்தேகத்தின் பேரில் சுய தனிமைப்படுத்தலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.