கொரோனா வைரஸின் தாக்கத்தையடுத்தது வெளிநாட்டு விமான நிலையங்களில் சிக்கியுள்ள 33 இலங்கையர்களில் மூவர் நாடு திரும்பியுள்ளனர்.
டுபாய் மற்றும் மாலைதீவிலிருந்து குறித்த மூவரும் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
இவர்களில் இருவர் டுபாயிலிருந்தும், மற்றவர் மாலைதீவிலிருந்தும் இலங்கையை வந்தடைந்துள்ளனர் என்று ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
ஏனைய 30 பேரையும் எதிர்வரும் நாட்களில் இலங்கைக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்காக அந்தந்த நாடுகளில் அமைந்துள்ள தூதரக அலுவலகத்துடன் தொடர்புகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இவ்வாறு நாட்டுக்கு அழைத்துவரப்படும் இலங்கையர்களை 21 நாட்கள் தனிமைப்படுத்தவுள்ளதாகவும் ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே மேலும் தெரிவித்துள்ளார்.