மாத்தறை வலய ஊழல் தடுப்பு பிரிவினர் ஒரு தொகை போதை மாத்திரைகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (10) நாள் மாலை வல்கம பகுதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடி்ககையின் போதே, 600 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்கள் நீண்ட காலமாக குறித்த போதை மாத்திரை வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் வெலிகம-தெனிபிடிய மற்றும் மாத்தறை-கனத்தகொட பிரதேசத்தில் வசித்து வருபவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.