யாழ்ப்பாண வணிகர் கழகத்திற்கும் யாழ் மாவட்ட அரசாங்க அதிபருக்குமிடையில் கலந்துரையாடல்!

images 1 3 1
images 1 3 1

யாழ்ப்பாண வணிகர் கழகத்திற்கும் யாழ் மாவட்ட அரசாங்க அதிபருக்குமிடையில் கலந்துரையாடல் ஒன்று நேற்று இடம் பெற்றது.

அரிசி மற்றும் ஏனைய உலர் உணவுப் பொருட்களின் நிர்ணய விலை தொடர்பில் குறித்த கலந்துரையாடலில் ஆராயப்பட்டது.

அரசாங்கத்தின் விலை நிர்ணயத்திற்கேற்ப அரிசியின் விலையை நிர்ணயிக்கவேண்டும் வேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆட்டக்காரி, மொட்டை கருப்பன் ஆகிய நெல் இனங்களுக்கான விலை அரசாங்கம் நிர்ணயிக்காத நிலையில் இது தொடர்பான நிர்ணய விலையினை நெல் உரிமையாளர்கள் மற்றும்  உற்பத்தியாளர்களுடன் கலந்துரையாடி அதற்கான விலை நிர்ணயிக்கப்படும் என அரசாங்க அதிபர் குறிப்பிட்டார்.