கொரோனா வைரஸ் பரவலால் அதி அபாய வலயமாக பிரகடனம் செய்யப்பட்டிருந்த இரத்தினபுரி மற்றும் பெல்மதுளை ஆகிய பொலிஸ் பிரிவுகள் அபாய வலயத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளன.
சுகாதார, பாதுகாப்புத் தரப்பினர் இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
இரத்தினபுரி பகுதியில் மாணிக்கக் கல் வர்த்தகர் ஒருவரும் அவரது குடும்பத்தாருமாக 5 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டதை அடுத்து குறித்த இரு பொலிஸ் பிரிவுகள் அதி அபாய பகுதிகளாக பெயரிடப்பட்டன.
மேலும், கொரோனா வைரஸ் தொற்று பரவலால் அதி அபாய பிரதேசங்களாக மேல் மாகாணத்தின் கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மாவட்டங்களும், புத்தளம், கண்டி மற்றும் யாழ். மாவட்டங்களும் தொடர்ந்தும் நீடிக்கின்றன. அந்த பகுதிகளில் ஊரடங்கு மறு அறிவித்தல் வரை நீடிக்கப்பட்டுள்ளது.