முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக தொடர்ந்தும் வெறுக்கத்தக்க பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எனவே இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று முஸ்லிம் அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
இது தொடர்பில் காவல்துறையின் பதில் காவல்துறை அதிபருக்கு கொழும்பு மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனம் மற்றும் முஸ்லிம் கவுன்சில் உட்பட்ட அமைப்புக்களால் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
அதில் சமூக ஊடகங்களில் முஸ்லிம்களுக்கு எதிரான குரல் பதிவுகள் போன்றவை பதிவிடப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.