யாழ் மன்ற ஏற்பாட்டில் யாழ் மக்களிற்கு நிவாரணம்!

download 5 6
download 5 6

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி யாழ் மன்றம் ஏற்பாட்டில் இன்றையதினம் மக்களுக்கான நிவாரணப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.


யாழ்ப்பாணம்  கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஜே.259 கல்வியன்காடு கிராம உத்தியோகத்தர் பிரிவில் வசிக்கும்  75 குடும்பங்களுக்கே நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.


ஒரு குடும்பத்திற்கு 2 ஆயிரம் ரூபாய் பெறுமதியான அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய உலர் உணவுப் பொருட்கள் இன்றையதினம் இரண்டாம் கட்டமாமாக மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி யாழ் மன்றம் ஏற்பாட்டில் வழங்கப்பட்டுள்ளது.


குறித்த நிவாரண பொதிகளை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி யாழ் மன்றம் அங்கத்துவர்கள் மக்களுக்கு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.