பாம்பு தீண்டியதில் ஐந்து பிள்ளைகளின் தாய் மரணம்! யாழில் பரிதாபம்!

sn
sn

யாழ்ப்பாணம் உடுவில் பகுதியில் பாம்பு தீண்டிய பெண் ஒருவர் சிகிச்சை பயனின்றி நேற்றுமுன்தினம் உயிரிழந்துள்ளார்.

உடுவில் ஆலடியைச் சேர்ந்த சு.சுதர்சினி (வயது-28) என்ற 5 பிள்ளைகளின் தாயே உயிரிழந்துள்ளார்.

கடந்த 25ஆம் திகதி வீட்டில் இவரைப் பாம்பு தீண்டியுள்ளது. அவர் தெல்லிப்பழை மருத்துமவனையில் சேர்க்கப்பட்டார். அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துமனைக்கு மாற்றப்பட்டார். அவர் சிகிச்சை பயனின்றி நேற்றுமுன்தினம் உயிரிழந்தார்.

இறப்பு விசாரணைகளைத் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிரேமகுமார் மேற்கொண்டார்.