மதுபான போத்தல்களுடன் இருவர் கைது!

download 1 17
download 1 17

கல்துவ பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் பயணித்த சிற்றுந்து ஒன்றினை சோதனை செய்த போது மதுபானம் கொண்டு சென்ற இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள் மதுபானத்தை மாகந்துரவில் வாங்கி மாத்தரையில் அதிக விலைக்கு விற்பனை செய்ய கொண்டு சென்றதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவலைப்புகளில் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மதுபானங்கள் மீட்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.