கொரோனா தொற்று 241 மூவர் இன்று அடையாளம்; 70 பேர் பூரண குணமடைவு

8 cc
8 cc

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் மூவர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

புனானை தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்த மூவருக்கே கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து  தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 238 இலிருந்து 241 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா  தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த மேலும் இருவர் குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளனர்.

அதற்கமைய இதுவரை பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 70 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 164 நோயாளிகள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் 148 பேர் கொரோனா வைரஸ் சந்தேகத்தில் வைத்தியசாலைகளில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.