கொரோனா தொற்று 242 மூவர் இன்று அடையாளம்; 77 பேர் பூரண குணமடைவு

7 es 3
7 es 3

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் நால்வர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதையடுத்து தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 238 இலிருந்து 242 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா  தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 9 பேர்  பூரண குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளனர்.

அதற்கமைய இதுவரை பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 77 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 158 நோயாளிகள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் 148 பேர் கொரோனா வைரஸ் சந்தேகத்தில் வைத்தியசாலைகளில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.