நாளை முதல் புகையிரத சேவை ஆரம்பம் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

625.500.560.350.160.300.053.800.900.160.90 8
625.500.560.350.160.300.053.800.900.160.90 8

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரன சூழ்நிலை காரணமாக அலுவலக புகையிரதங்களில் பயணிக்கும் பயணிகள் பயணச்சீட்டை பெறும் போது ஒரு மீற்றர் இடைவெளியில் இருக்க வேண்டும். அத்துடன் காய்ச்சல, இருமல் உள்ளிட்ட நோய் அறிகுறிகள் உள்ளவர்கள் புகையிரத சேவையினை பயன்படுத்த வேண்டாம் என புகையிரத திணைக்களம் பொது மக்களிடம் கோரிக்கை.

நாளை (20) முதல் இலங்கை புகையிரத சேவைகள் பாதுகாப்பான முறையில் ஆரம்பிக்கப்படவுள்ளன. புகையிரத திணைக்கள பொது முகாமையாளர் டிலந்த பிரனாந்து தெரிவித்துள்ளார்.

பயணச்சீட்டு விநியோகிப்பது தொடக்கம் புகையிரத நிலைய சாதாரண செயற்பாடுகளுக்காகவும் விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

புகையிரதத்தின் ஒரு பெட்டியில் 50 பேர் மாத்திரமே பாதுகாப்பான முறையில் பயணிக்க முடியும்.

பயணிகள் புகையிரத நிலையத்துக்குள் உள்வரும் போதும், புகையிரத்தில் பயணிக்கும் போதும் முக பாதுகாப்பு கவசங்களை கட்டாயம் அணிய வேண்டும்.

புகையிரத நிலையத்திற்குள் எச்சில் துப்புவதும், தேவையற்ற விதத்தில் நடமாடுவதும் தடை செய்யப்பட்டுள்ளது.

வகுக்கப்பட்டுள்ளன வழிமுறைகளுக்கு இடையூறு விளைவிப்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தினால் அத்தியாவசிய சேவையாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள அரச மற்றும் தனியார் துறையினர் மாத்திரம் அலுவல புகையிரதங்களில் பயணம் செய்ய முடியும்.

ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் உள்ள சாதாரண மக்கள் மக்கள் அலுவலக புகையிரதங்களில் பயணிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.