4700 பஸ்கள் சேவையில் ; தாம் விரும்பியபடி பயணிக்கும் மக்கள்

6 n 1 1
6 n 1 1

ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்டுள்ள பகுதிகளில் மாத்திரம் பொது போக்குவரத்து சேவைகளை முன்னெடுக்க பொது போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.

எனினும் எதிர்வரும் 22 ஆம் திகதி ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்படவுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி, கேகாலை, அம்பாறை உள்ளிட்ட மாவட்டங்களில் பொது போக்குவரத்து இடம்பெறாது.

இன்றைய தினம் ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்டுள்ள பிரதேசங்களில் முன்னெடுக்கப்படும் ரயில் மற்றும் பேருந்து சேவைகளை அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் பயன்படுத்த முடியும் என அமைச்சு அறிவித்துள்ளது.

சாதாரணமாக முன்னெடுக்கப்படும் பயணிகள் சேவை இன்று முன்னெடுக்கப்படாது என அமைச்சு அறிவித்துள்ளது.

பஸ்களில் உள்ள ஆசன வரிசையில் ஒருவர் மாத்திரமே அமர முடியும் எனவும் முடியுமான அளவு சமூக இடைவெளியை பேணுமாறு அமைச்சு தெரிவித்துள்ளது.

அரச ஊழியர்கள் தாம் மார்ச் மாதத்திற்காக பெற்றுக்;கொண்ட பருவக்கால சீட்டை பயன்படுத்த முடியும் என்பதோடு கைகளை கழுவ ரயில்களிலும், பேருந்துகளிலும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்டுள்ள பகுதிகளில் சுமார் 4700 பஸ்களை சேவையில் ஈடுப்படுத்தியுள்ளதா இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை இன்றைய தினம் நான்கு ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படுகின்றன.