சுகாதார ஆலோசனைகளை பின்பற்றாத பஸ்கள் மீது நடவடிக்கை!!

3 bus
3 bus

கொரோனா தொற்று பரவும் அச்சம் காரணமாக அமுலில் இருந்த ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ள பகுதிகளில் சுகாதார ஆலோசனைகளை பின்பற்றாத நிலையில் சேவையில் ஈடுபடும் பஸ்களுக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அறிவுறுத்தல்களை பின்பற்றாது, பயணிகளை ஏற்றிச்செல்லும் பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு எதிராகவே இவ்வாறு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.