வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இலங்கை பிரஜைகள் இன்று வருகின்றனர்

90 1
90 1

கொரோனா தொற்றுநோய் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இலங்கையின் முதல் குழு இன்று பிற்பகல் நாட்டுக்கு அழைத்துவரப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்திய மற்றும் பாகிஸ்தான் பல்கலைக்கழகங்களில் சிக்கியுள்ள கிட்டத்தட்ட 100 மாணவர்களே இவ்வாறு அழைத்து வரப்படவுள்ளதாக சுற்றுலா மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் பிரசன்னா ரனதுங்க தெரிவித்தார்.

இவர்கள் அனைவரும் நாடு திரும்பியவுடன் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.