மாவட்ட மட்டத்தில் அபிவிருத்தி செய்வது குறித்து ஜனாதிபதி கவனம்

8 d 3
8 d 3

நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் இணைத்து விவசாய உற்பத்திகளை கொள்வனவு செய்தல், களஞ்சியப்படுத்தல் மற்றும் விநியோகிப்பதற்காக புதிய பொறிமுறையொன்றை உருவாக்குவது குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கவனம் செலுத்தியுள்ளார்.

இந்த செயற்பாடுகள் அனைத்து அரசாங்க அதிபர்களின் தலைமையில் முன்னெடுக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

மாவட்ட செயலாளர்களுடன் நேற்று(திங்கட்கிழமை) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தொற்றை ஒழிப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு மாவட்ட செயலாளர்கள் வழங்கிய ஒத்துழைப்பு மிகச்சிறப்பாக இருந்ததாக தெரிவித்த ஜனாதிபதி அதற்கு தனது பாராட்டுக்களை குறிப்பிட்டார்.

கொரோனா வைரஸ் தொற்றை ஒழிப்பதற்கு இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் தற்போதைய நிலை குறித்து ஜனாதிபதி மாவட்ட செயலாளர்களுக்கு விளக்கினார்.

ஊரடங்கு சட்டத்தை தளர்த்தி மக்கள் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருகின்றது. பொருளாதார ரீதியாக பலம்பெறுவது அரசாங்கத்தின் நோக்கமாகும். அதற்காக விவசாயத்திற்கு முன்னுரிமையளித்து தேசிய பொருளாதாரத்தை பலப்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் மாவட்ட மட்டத்தில் சுதேச கைத்தொழில்கள் மற்றும் ஏனைய உற்பத்தி கைத்தொழில்கள் குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டும். இதற்காக தொழில்முயற்சியாளர்களை வலுவூட்ட வேண்டும் என்பதுடன், அவர்களுக்கு முழுமையான உதவியை அரசாங்கம் என்ற வகையில் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.