இரத்தினபுரி மாவட்டம், வரக்காபொல பிரதேசத்தில் நேற்று (21) இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் பணியாற்றிய கொரோனா தொற்றுக்குள்ளான பெண் தங்கியிருந்த வீட்டைச் சேர்ந்தவர் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.
இதையடுத்து வரக்காபொல பகுதியில் இனங்காணப்பட்ட தொற்றாளர் நேற்று (21) இரவு கொழும்பு தேசிய தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் பணியாற்றிய குறித்த பண் தங்கியிருந்து வீட்டார் தனிமைப்படுதத்லுக்கு உட்படுத்தப்பட்ட நிலையிலேயே, குறித்த நபர் நேற்று (21) பி.சி.ஆர். பரிசோதனையின்போது தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அந்த வீட்டைச் சேர்ந்த மேலும் இருவர் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மேலும் கூறினார்.