ஶ்ரீலங்கன் விமானத்தில் பயணிக்கும் அனைவரும் முகக்கவசங்களை அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த விடயத்தினை வெளியிட்டுள்ளது .
விமான நிலையங்களுக்குள் வரும் போதும், விமானங்களில் பயணிக்கும் போதும் முகக் கவசம் அணிவது உடன் அமுல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா உலக நாடுகளில் அதிக வேகத்தில் பரவிவரும் இவ்வேளையில் அனைத்து நாடுகளுக்குமான விமான சேவைகள் இடை நிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிட தக்கது .