யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கொரோனா வைரஸ் கிருமித் தொற்று நீக்கும் மருந்து விசிறும் நடவடிக்கை இன்று காலை முன்னெடுக்கப்பட்டது.
கொரோனோ தொற்று பரவாமல் கட்டுப்படுத்தும் நோக்கில் யாழ் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் தொடர்ச்சியாக கிருமித் தொற்று நீக்கல் மருந்து விசிறும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதனடிப்படையில் இன்று யாழ் பல்கலைக்கழகத்தின் அனைத்துப் பீடங்களுக்கும் பல்கலைக்கழக சூழலிலும் கிருமித் தொற்று நீக்கல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.