எரிந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம்

9 kure
9 kure

யாழ்ப்பாணம் ஏழாலைப் பகுதியில் எரிந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று காலை இணங்காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஏழாலை தெற்று மயிலங்காடு பிரதேசத்தில் வீதியிலேயே குறித்த சடலம் காணப்பட்டது.

சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது.

குறித்த பகுதியில் வீதியோரமாக ஆண் ஒருவரின் சடலம் எரிந்த நிலையில் இன்று காலை காணப்பட்டுள்ளது. ஆயினும் குறித்த நபர் தொடர்பில் அடையாளம் காணப்படவில்லை.

மேலும் சடலம் எரிந்த நிலையில் காணப்படுகின்ற நிலையைில் கொலையா தற்கொலையா என்பது குறித்து தெரியவரவில்லை. இந் நிலையில் பொலிஸார் தற்போது விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.