கொரோனா தொற்றியோர் 505 நேற்று மட்டும் 45 பேர் பாதிப்பு

1 m 2
1 m 2

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 20 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு 9.00 மணியளவில் தேசிய தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கொரோனா வைரஸ் தொற்றியவர்களின் எண்ணிக்கை 14 இனால் அதிகரித்து 485 இலிருந்து 499 ஆக அதிகரித்ததோடு, இரவு 9.54 மணியளவில் மேலும் 6 பேர் அடையாளம் காணப்பட்டு 499 இலிருந்து 505 ஆக அதிகரித்துள்ளது.

அதற்கமைய, நேற்றைய தினம் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 45 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, 02 பேர் குணமடைந்து வீடு திரும்பியியுள்ளனர்.

அந்த வகையில், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியதாக தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள 505 பேரில் தற்போது 378 நோயாளிகள் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதோடு, சீனப் பெண் உள்ளடங்கலாக இது வரை 120 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். அத்துடன் இது வரை 07 பேர் மரணமடைந்துள்ளனர்.

இதேவேளை, மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் தொடர்பிலான சந்தேகத்தின் அடிப்படையில் 273 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக, சுகாதார மேம்பாட்டுப் பணியகம் அறிவித்துள்ளது.