கர்ப்பிணிப்பெண்கள் அவதானம்

fvc
fvc

கர்ப்பிணிப்பெண்கள் பின்வரும் அபாய அறிகுறிகள் ஏற்படுமாயின் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க அறிவிதித்துள்ளார்.

அந்தவகையில் காய்ச்சல், இரத்தப்போக்கு, கடுமையான தலைவலி, சுவாசிப்பதில் சிரமம், பார்வை குறைபாடு, வலிப்பு (Fits), நெஞ்சு/வயிற்று வலி ,சிசுவின் அசைவு குறைதல், உடலின் வீக்கம் அல்லது வேறு ஏதேனும் கடுமையான அசௌகரியம் இருந்தால் உடனடியாக மருத்துவமனையை நாட வேண்டும்.

மேலும் தரமான சேவையை வழங்கவும் மருத்துவமனைகளில் நெரிசலைக் குறைக்கவும் (கிளினிக்) தொடர் மருத்துவ பரிசோதனைக்கு செல்லும் கர்ப்பிணிப்பெண்கள் முற்பதிவுகளை பெறுமாறும் அறிவுறுத்தியுள்ளார்.