இந்தியாவில் சிக்கியிருந்த இலங்கை மாணவர்களோடு வந்த விமானம்!

a7
a7

கொரோனா தொற்று காரணமாக இந்தியாவில் சிக்கியிருந்த இலங்கை மாணவர்களை அழைத்துக்கு கொண்டு விசேட விமானம் ஒன்று தற்போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளதாக விமான நிலையத் தகவல்கள் கூறுகின்றன.

குறித்த ஸ்ரீ லங்கன் விமான சேவைகள் நிறுவனத்திற்கு சொந்தமான யு.எல் 1172 என்ற விசேட விமானமே இன்று (28) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இந்தியாவுக்கு புறப்பட்டு சென்றுள்ளது.

இந்தியாவில் தங்கியிருந்த 164 இலங்கை மாணவர்களே இவ்வாரு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

குறித்த விமானம் இன்று மதியம் 12.55 அளவில் மீண்டும் இந்தியாவில் இருந்து இலங்கை வந்தடைந்துள்ளது.