கட்டாயத் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள 3 ஆயிரத்து 292 பேர்!

04 1
04 1

இராணுவத்தின் கீழுள்ள 31 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 3 ஆயிரத்து 292 பேர் கட்டாயத் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்று கொரோனா தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“இந்தியாவிலிருந்து 164 பேர் நேற்று விசேட விமானம் மூலம் அழைத்து வரப்பட்டனர். இவர்கள் பெங்களூரிலிருந்து அழைத்து வரப்பட்டனர். இவர்களில் இராணுவத்தினர், அரச ஊழியர்கள் ஆகியோரும் அடங்குகின்றனர். இவர்கள் அனைவரும் இராணுவத்தின் கட்டாயத் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

இராணுவத்தின் கீழுள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து 4 ஆயிரத்து 526 பேர் வீடு திரும்பியுள்ளனர். கொரோனா தொற்றிய கடற்படையினர் குடும்பத்தினர் மற்றும் நெருக்கமாகப் பழகியவர்கள் ஆகியோரும் கட்டாயத் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இராணுவத்தின் கீழுள்ள 31 நிலையங்களில் 3 ஆயிரத்து 292 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்” – என குறிப்பிட்டுள்ளார்.