பரிதாபமாக உயிரிழந்த குழந்தை!

baby 1
baby 1

ஆயித்தியமலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உண்ணிச்சி பகுதியில் வீடுகளில் நீர் சேமிக்குள் வாளிக்குள் வீழ்ந்து 2 வயது ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.

குறித்த சம்பவம் நேற்று (28) மாலையில் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த சிறுவன் வீட்டு வளாகத்தில் விளையாடிக்கொண்டிருந்த போதே இவ்வாறு நீர் சேமிக்கும் வாளிக்குள் வீழ்ந்துள்ளார்.

சிறுவனின் தலையில் வாளியின் அடிப்பாகத்தில் சிக்குண்ட நிலையில் பாதிக்கப்பட்ட சிறுவன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் கூறியுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை ஆயித்திமலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.