மீண்டும் திறக்கப்பட்டது மெனிங் சந்தை!

 சந்தை
சந்தை

ஊரடங்கு உத்தரவினால் மூடப்பட்டிருந்த கொழும்பு , புறக்கோட்டை மெனிங் மார்க்கட் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

மேலும் ஞாயிற்றுக்கிழமையைத் தவிர ஒவ்வொரு நாளும் அதிகாலை (4) மணி முதல் பிற்பகல் (1) மணி வரை திறந்திருக்கும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

மொத்த விற்பனையாளர்களினால் முன்வைக்கப்பட்ட பல கோரிக்கைகளுக்கு இணங்கவே மெனிங் மார்க்கட்டினை திறப்பதற்கே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தையில் நுழையும் அனைத்து வர்த்தக பணியாளர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கும் முகமூடி அணிவது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதுடன், சுகாதார ஆலோசனைகளை கடைப்பிடிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையில், மொபைல் வர்த்தகத்தை செயல்படுத்த உதவும் பொருளாதார மையங்களை காலை (7) மணி முதல் நண்பகல் (12) மணி வரை செயற்படுத்தவும் அரசு அனுமதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

செயற்படுத்தவும் அரசு அனுமதித்துள்ளது.