இன்று மூவர் அடையாளம் – அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் எவரும் இல்லை

1 vv 6
1 vv 6

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 03 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றியவர்வர்களின் மொத்த எண்ணிக்கை 619 இலிருந்து 622 ஆக அதிகரித்துள்ளது.

இன்று குணமடைந்து எவரும் வீடு செல்லவில்லை.

அந்தவகையில், கொரோனாவுடன் அடையாளம் காணப்பட்டுள்ள 622 பேரில் தற்போது 481 நோயாளிகள் சிகிச்சைக்குட்படுத்தப்பட்டுள்ளனர். 134 பேர் குணமடைந்துள்ளனர்.

தற்போது சிகிச்சை பெற்றுவரும் 481 பேரில், எந்தவொரு நோயாளியும் ஆபத்தான நிலையில் இல்லை எனவும், தற்போது அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் எவரும் சிகிச்சைக்குட்படுத்தவில்லை எனவும், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

நேற்று 31 பேர் புதிய தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டதோடு, 08 பேர் குணமடைந்து வீடு திரும்பியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.