தொற்றுக்குள்ளான நபர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

0 gg
0 gg

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான நபர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 649ஆக அதிகரித்துள்ளது.

தற்போது வரை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான ஏழு பேர் உயிரிழந்துள்ளதுடன் 136 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இதேவேளை கொரோனா தொற்றுக்குள்ளான 506 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.