663 ஆக அதிகரித்தது கொரோனா தொற்று

56
56

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 14 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதையடுத்து தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 663 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அதேவேளை, 18 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதற்கமைய குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 154 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது 502 நோயாளிகள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, மேலும் 187 பேர் வைத்தியசாலைகளில் கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.