கிறிஸ்தவ இடுகாட்டில் அடாவடி

IMG 20200502 WA0016 1
IMG 20200502 WA0016 1

யாழ்ப்பாணம், வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட நவாலி பகுதியில் அமைந்துள்ள
நவாலி அமெரிக்கன் சிலோன் மிசன் திருச்சபைக்கு சொந்தமான இடுகாட்டில் சில நினைவு தூபிகள் விசமிகளால் சேதமாக்கப்பட்டுள்ளன.

குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு வருகைதந்த மானிப்பாய் பிரதேச சபை தவிசாளர் அந்தோனிப்பிள்ளை ஜெபநேசன் குறித்த விடயம் தொடர்பாக ஆராய்ந்திருந்தார்.

இது தொடர்பாக மானிப்பாய் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.