கேப்பாபிலவில் இறந்த இருவர் தொடர்பில் பரிசோதனை

90 1
90 1

முல்லைத்தீவு கேப்பாபிலவு தனிமைப்படுத்தல் முகாமில் இருந்த இருவர் நேற்றையதினம் உயிரிழந்திருந்தனர்.

80 வயது கடந்த இருவர் முள்ளியவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இவ்வாறு உயிரிழந்ததாக விமானப்படை பேச்சாளர் குரூப் கப்டன் துஷான் விஜேசிங்க தெரிவித்தார்.

உயிரிழந்தவர்கள் விமானப்படையினால் நடத்தப்படும் தனிமைப்படுத்தும் முகாமில் இருந்தவர்கள் என்றும், உயிரிழந்த இருவரும் கொழும்பு குணசிங்கபுர பகுதியை சேர்ந்தவர்கள் என்று குறிப்பிட்ட அவர், உயிரிழப்பிற்கு கொரோனா வைரஸா காரணம் என்பது குறித்து பரிசோதனை நடத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.