மணல் கொண்டு செல்வதற்கான போக்குவரத்து அனுமதி

15 1
15 1

இலங்கையில் மணல், மண் மற்றும் சரளைகளை கொண்டு செல்வதற்கான அனுமதி வழங்கல் 11ஆம் திகதி தொடக்கம் மேற்கொள்ளப்படும் என புவிச் சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் அறிவித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் 12ஆம் திகதியன்று வெளியான சுற்றறிக்கையின் கீழ், இதற்கான போக்குவரத்து அனுமதி பத்திரங்கள் வழங்கப்படவுள்ளதுடன், வருகைதரும் விண்ணப்பதாரிகள் தனிமனித இடைவெளியை பேணுவது அவசியம் என தெரிவிக்கப்படுகிறது.

தற்போதுள்ள பாதுகாப்பு விதிமுறைகளின் கீழ் பணியகத்திற்கு வாடிக்கையாளர்களின் வருகையை மட்டுப்படுத்தவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் புவிச் சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

பணியகத்தின் கனிம உரிமைகள் பணிப்பாளர் அல்லது தொடர்புடைய பிராந்திய அகழ்வாராய்ச்சி பொறியாளரை தொடர்புகொண்டு மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம்.