வர்த்தக நிறுவனங்கள் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்வதற்கான கால எல்லை!

7 iad
7 iad

கொரோனா வைரசு தொற்று நிலைமையின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள வர்த்தக நிறுவனங்கள் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்வதற்கான கால எல்லை 2020 மே மாதம் 15ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.

இதுதொடரபாக தொழில் ஆணையாளர் நாயகம் விடுத்துள்ள அறிக்கை பின்வருமாறு:.

கொரோனா வைரசு தொற்று நிலைமையின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள வர்த்தக நிறுவனங்கள் தொடர்பான தகவல்களைப் பெற்றுக் கொள்ளல்.

கொரோனா வைரசு தொற்று நிலைமையின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள வர்த்தக நிறுவனங்கள் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்வதற்கான கால எல்லை 2020 மே மாதம் 15ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டிருப்பதாக தொழில் ஆணையாளர் நாயகம் திரு .ஏ.விமலவீர அறிவித்துள்ளார்.

தமது நிறுவனங்கள் தொடர்பான தகவல்களை வழங்குவதற்காக வர்த்தக சமூகத்தினர் சாதகமாக பதில்களை அளித்துவருவதினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கமைவாக https://forms.gle/pE64ygeuHrK7TZcH9 என்ற இணையதள லிங்க்கில் ((web link) பிரவேசித்து நேரடியாக தகவல்களை வழங்க முடியும் என்றும் இதற்கு மேலதிகமாக தொழில் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையதளமான www.labourdept.gov.lk பதிலளிக்க முடியும் என்றும் தொழில் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.