கணவனை இழந்த பெண்ணின் குடும்பத்திற்கு இராணுவத்தினரால் வீடு

IMG 1607 1 scaled
IMG 1607 1 scaled

சுமார் 6 லட்சத்து 50 ஆயிரம் பெறுமதியில் கணவனை இழந்த பெண்ணின் குடும்பத்திற்கு புதிதாக நிர்மாணிக்கப்பட்டவுள்ள வீட்டிற்கான அடிக்கல்லினை, யாழ்.மாவட்ட கட்டளைத்தளபதி ரூவான் வணிகசூரிய இன்று (06) நாட்டி வைத்தார்.

கொழும்பு ஆனந்தா கல்லூரி பழைய மாணவர் ஒருவரின் நிதி பங்களிப்பில், இராணுவத்தினரால் இந்த வீடு புதிதாக நிர்மாணிக்கப்பட்டவுள்ளது.


ஜே /182 உடுவில் தெற்கு, கிராம சேவையாளர் பிரிவில் வசிக்கும் பெண் ஒருவர் கணவனை இழந்த நிலையில் குடிசை வீட்டில் வசித்து வருகிறார்.

கிராம சேவையாளர் ஊடாக இந்த குடும்பம் தெரிவு செய்யப்பட்டு, புதிதாக வீடு அமைத்துக் கொடுக்கப்பட்டவுள்ளமை குறிப்பிட தக்கது .