கொழும்பில் மூன்று பேருக்கு கொரோனா தொற்று இல்லை

y6 1
y6 1

கொழும்பு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானதாக நேற்று அறிவிக்கப்பட்ட கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தாதி உத்தியோகத்தர், இராஜகிரியவைச் சேர்ந்த ஓட்டோ சாரதி மற்றும் கொலன்னாவையைச் சேர்ந்த போதைப்பொருள் பாவனையாளர் ஆகியோருக்கு இன்று மீண்டும் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையின்போது கொரோனா தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க நேற்று மாலை தெரிவித்தார்.

இதற்கமைய,  கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் பட்டியலிருந்து இவர்கள் மூவரினதும் பெயர்களை நீக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் கூறினார்.