அரச உத்தியோகத்தர் களுக்கு மேலதிக கொடுப்பனவு ; அமைச்சரவை அனுமதி

4 load
4 load

அரச உத்தியோகத்தர்களுக்கு மேலதிக கொடுப்பனவை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

5000 ரூபாய் கொடுப்பனவை மக்களுக்கு பெற்றுக்கொடுக்கும் செயற்பாட்டில் ஈடுபடும் அரச உத்தியோகத்தர்களுக்கே இவ்வாறு மேலதிக கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொடுப்பனவு வழங்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ள அரச ஊழியர்களின் சேவையை கௌரவித்து, அவர்களுக்கான மேலதிக கொடுப்பனவை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிராம உத்தியோகத்தர்கள், விவசாய ஆராய்ச்சி உதவியாளர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் குடும்பநல சுகாதார தாதியர் ஆகியோருக்கு இந்த மேலதிக கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.