அசிட் வீச்சில் இளைஞர் பலி, இரு பெண்கள் காயம்

44 ad 1
44 ad 1

குளியாப்பிட்டி பகுதியில் காதல் விவகாரம் தொடர்பில் ஏற்பட்ட முரண்பாட்டின்போது அசிட் வீச்சுத் தாக்குதலில் பெண்கள் இருவரும் இளைஞர் ஒருவரும் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது கடுமையான எரிகாயத்துக்குள்ளான இளைஞர் உயிரிழந்துள்ளதுடன் பெண்கள் இருவரும் குளியாப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில் குருணாகல் – மல்கடுவாவ பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார். சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவங்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.