இலங்கையில் நேற்றைய தினம் 1,553 பி.சி.ஆர் சோதனைகள்!

3 ty5
3 ty5

இலங்கையில் கொரோனா தொற்றினை கண்டறிவதற்காக நேற்று (7) மாத்திரம் மொத்தமாக 1,553 பி.சி.ஆர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

எதிர்வரும் (2020.02.18) ஆம் நாள் முதல் தற்போது வரை இலங்கையில் மொத்தமாக 32,078 பி.சி.ஆர்.சோதனைகள் செய்யப்பட்டுள்ளது.

சித்திரை மாதம் (27) ஆம் நாளே அதிகளவான பி.சி.ஆர். சோதனைகள் நடைபெற்றதாக பதிவாகியுள்ளது. அன்றைய தினம் மொத்தமாக 1,869 பி.சி.ஆர் சோதனைகள் நடைபெற்றுள்ளது.

நாட்டில் மொத்தமாக அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையானது 824 ஆக காணப்படுவதுடன், குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 232 ஆக பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.