கொரோனா தொற்றுக்குள்ளான நால்வர் பற்றி – சத்தியமூர்த்தி தகவல்!

th 5
th 5

நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான வடபகுதியைச் சேர்ந்த மேலும் 4 பேர் முழுமையாக குணமடைந்துள்ளனர் என்று யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி கூறியுள்ளார்.

குறித்த நபர்கள் இரணவில வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குணமடைந்த 4 பேரும் இன்று (8) தமது வீடுகளுக்கு வந்து சேர்வார்கள் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

நாட்டின் வடக்கு மாகாணத்தினைச் சேர்ந்த 17 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் சிகிச்சைக்காக நாட்டில் உள்ள கொரோனா சிறப்பு வைத்திய சாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

அவர்களின் ஏற்கனவே 10 பேர் முழுமையாக குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

மேலும் 4 பேர் தற்போது முழுமையாக குணமடைந்துள்ளனர். அவர்கள் இன்று வீடுகளுக்கு செல்லவுள்ளனர்.

மேலும் 3 பேர் தொடர்ந்து வைத்திய சாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.