யாழ் மக்களுக்கு மின்சார சபையின் முக்கிய அறிவிப்பு!

th 6
th 6

வடமாகாணங்களின் சில பகுதிகளில் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொறியியல் பிரிவு தெரிவித்துள்ளது.

மின்சார சபையின் திருத்த வேலைகள் காரணமாக நாளை (09) காலை (8.30) மணி தொடக்கம் மாலை (05) மணி வரையான காலப்பகுதியில் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் கைதடி , நுணாவில், மட்டுவில் வாகையடி, நாவற்குழி, கோவிலாக்கண்டி, தச்சந்தோப்பு, மறவன்புலவு, அறுகுவெளி, தனங்கிளப்பு, வெற்றிலைக்கேணி , பூதர்மடம் , கோப்பாய், கல்வியங்காடு, கட்டைப்பிராய், இருபாலை, வசந்தபுரம், கிளுவானை, ஜிபிஎஸ் வீதி, இராமலிங்கம் சந்தி, ஆடியபாதம் – நல்லூர் வீதி, கிளிகடை, ஆடியபாதம் வீதி, இராமலிங்கம் – ஆடியபாதம், கோப்பாய் – மானிப்பாய் வீதி , கோப்பாய் – கைதடி வீதி, கோப்பாய் – பருத்தித்துறை வீதி ,

கோவில் வீதி – சங்கிலியன் வீதி, நல்லூர் பிரதேசம், கச்சேரி நல்லூர் வீதி, நாயன்மார்கட்டு பிரதேசம், நாவலர் வீதி, கனகரட்ணம் சந்தியிலிருந்து நல்லூர் செட்டி வீதி வரை, பாரதி வீதி, புறுடி வீதி, நொத்தாரிஸ் லேன், நல்லூர் குறுக்கு வீதி, கண்டி வீதியில் கச்சேரியிலிருந்து கண்டிவீதி செம்மணி வரை,

இலந்தைக்குளம், புங்கன்குளம், முல்லை, பூம்புகார், நாவலடி, அரியாலை கிழக்கு, செல்லர் வீதி, மாகியப்பிட்டி, அளவெட்டி, சண்டிலிப்பாய் வடக்கு, பனை அபிவிருத்தி சபை, சங்கன் தனியார் கட்டடம், சித்த ஆயுர்வேத பல்கலைக்கழகம், நாராயணா சீமெந்து உற்பத்தி தொழிற்சாலை,

வடக்கு பிரதம செயலாளர் செயலகம், யாழ் மாநகரசபை அலுவலகம், கல்வி அமைச்சு அலுவலகம், மற்றும் பல்கலைகழக வணிகப்பிரிவு ஆகிய பகுதிகளில் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என இலங்கை மின்சார வடமாகாண பொறியியல் பிரிவால் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.