நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரன சூழ்நிலையை கருத்திற் கொண்டு பொதுமக்களின் நன்மை கருதி எதிர்வரும் (11) ஆம் நாள் திங்கட்கிழமை முதல் நாடு முழுவதுமுள்ள சதொச விற்பனை நிலையங்களை மீள திறப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை தட்டுப்பாடின்றி வழங்கும் வகையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக லங்கா சதொச நிறுவனத் தலைவர் நுசாத் பெரேரா கூறியுள்ளார்.
மேலும் இந்நிலையில், சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு தமது ஊழியர்களுக்கு அறிவித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.