யாழில் தனிமைப்படுத்தப்பட்ட 298 பேர் இன்று விடுவிப்பு!!

IMG 0059 scaled
IMG 0059 scaled

யாழ்.தென்மராட்சி விடத்தற்பளை 522 படையணியின் தனிமைப்படுத்தப் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த 298 பேர் அவர்களது சொந்த இடங்களுக்குச் செல்ல இன்று அனுமதிக்கப்பட்டனர்.

கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தை மற்றும் வாழைத்தோட்டம் ஆகிய பகுதிகளிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டிருந்த 188 ஆண்களும், 110 பெண்களும் விடத்தற்பளை தனிமைப்படுத்தப் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில், 17 நாட்களில் அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்ட நிலையில் இன்று காலையில் அவர்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .