திறக்கப்பட உள்ளது கொழும்பு பங்குச் சந்தை!

7 yh
7 yh

கொழும்பு பங்குச் சந்தையின் பங்கு வர்த்தக நடவடிக்கைகள் நாளை மறுதினம் முதல் ஆரம்பிக்கப்பட உள்ளது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் அரச மற்றும் தனியார் நிறுவனங்களை நாளை மறுதினம் முதல் மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் என அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது.

இந்த தீர்மானத்தை கவனத்தில் கொண்டு கொழும்பு பங்குச் சந்தை இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

கோவிட் – 19 என்ற கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலக முழுவதும் பங்குச் சந்தைகள் வீழ்ச்சியடைந்தன.

இதனால், பங்குச் சந்தைகள் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.