நாளை கொழும்பு , கம்பஹா ஊரடங்கு தளர்த்தப்படுமா?

th 9
th 9

நாட்டை நாளை (11) திகதி மீண்டும் வழமைக்கு கொண்டு வருவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்தாலும் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் ஊரடங்கை தளர்த்துவதற்கான சாத்தியம் இல்லை என கூறப்படுகின்றது.

இது குறித்த செயிதியினை தமிழ் பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் இலங்கையில் நாடு தழுவிய ரீதியில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட போதிலும் கொழும்பு, களுத்துறை, கம்பஹா, புத்தளம் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்கள் அபாயகரமான வலயமாக அறிவிக்கப்பட்டு அவற்றுக்கான ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.