நாளை கூடுகின்றது அரசமைப்பு பேரவை

7 d 1 1
7 d 1 1

அரமைப்புப் பேரவையின் விசேட கூட்டம் நாளை திங்கட்கிழமை மாலை 4 மணிக்கு சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெறவுள்ளது.

சபாநாயகர் கரு ஜயசூரிய அரசமைப்புப் பேரவையின் தலைவர் என்ற அடிப்படையில் நாளைய கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள், அரசமைப்புச் சபை உறுப்பினர்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.